தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயங்கி விழுந்த பெண் பக்தர்

அண்ணாமலையார் கோயிலில் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தொடர்ச்சியாக நின்றபடி செல்லும் நிலை இருந்தது. மேலும் தரிசன வரிசையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தரிசன வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை

உமையாள் தீட்டிய சித்திரத்தின் மீது சிவபெருமானின் மூச்சுச்காற்று படர்ந்ததால், சித்திர குப்தர் உருவானதாகவும், அவ்வாறு சித்திர குப்தன் உருவான தினமே சித்ரா பவுர்ணமி எனவும் கூறப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் உண்ணாமுலையம்மன் அம்மன் சன்னதி எதிரில், நவகிரக சன்னதி அடுத்து அமைந்துள்ள சித்திர குப்தர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

குழந்தைகளை கண்டறிய கைகளில் ‘பேண்ட்’

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வசதியாக குழந்தைகளின் கையில் பெற்றோர் செல்போன் எண் குறிப்பிட்டு ‘பேண்ட்’ அணிவிக்கப்பட்டது. அதேபோல், குழந்தைகளை காண்பித்து பிச்சை எடுத்த பெண்களை கிரிவலப்பாதையில் இருந்து எச்சரித்து அனுப்பினர். திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சீருடை அணியாமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News