தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

6 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

பவானி, அக். 31: தமிழ்நாடு அரசு ஒரு கோடி பனை விதை விதைப்புத் திட்டம் 2025-ன் தொடர்ச்சியாக பவானி- அந்தியூர்- செல்லம்பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் 6 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி நேற்று தொடங்கியது.  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெருந்துறை கோட்டம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம், பவானி பிரிவு சார்பில் இரட்டை கரடில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் சேகர் தலைமை தாங்கினார்.

Advertisement

ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா பனைமர விதைகள் விதைக்கும் பணியை துவக்கி வைத்தார். பனைமரம் வளர்ப்போம், நிலத்தடி நீரை சேமிப்போம் என்பதற்கு இணங்க நெடுஞ்சாலை துறையின் மூலம் மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகளின் விளிம்பில் சாலை பணியாளர்களைக் கொண்டு பனை விதை விதைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உதவிப் பொறியாளர் த.பழனிவேலு, உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News