தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு,செப்.26: கவுந்தப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் 1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பெரியபுலியூர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார்,எஸ்ஐ மேனகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் 1,700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனை டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பவானி பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி (56) என்பது தெரிய வந்தது.

பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஈரோடு பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தீர்த்தகிரியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement