தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, நவ.22: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடந்த 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலை நிறுத்தம் தொடங்கிய நாளன்று, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக 2வது கட்டமாக நேற்று ஈரோடு தாலுக அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisement

இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் கௌரிசங்கர் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் சந்திரகுமார் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் நவமணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சேதுமாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும். பணிகளை முறைபடுத்திட வேண்டும்.

தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காத்திருப்பு போராட்டத்தில் திரளான நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News