தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓணம் பண்டிகையையொட்டி களைகட்டிய ஜவுளிச்சந்தை

ஈரோடு, ஆக.20: ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை கூடுவது வழக்கம். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இந்த ஈரோடு ஜவுளி வார சந்தையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள்.

Advertisement

அந்த வகையில், அசோகபுரம், ஈரோடு காந்திஜி ரோடு, ஸ்டேட் வங்கி ரோடு, சென்ட்ரல் தியேட்டர் ஆகிய பகுதிகளில் வாரச்சந்தை நேற்று முன்தினம் இரவு கூடியது. இதில், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனர். அடுத்த மாதம் செப்.5ம் தேதி, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனால், கேரள மாநில ஜவுளி வியாபாரிகள் அதிகளவில், ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு வந்திருந்தனர். இந்த வியாபாரிகள், கேரள மக்கள் பாரம்பரியமாக அணியும் செட் முண்டு, பட்டு ஜரிகை சேலை, அங்கவஸ்திரம், மஞ்சள் கரை போட்ட வேட்டி, துண்டு போன்ற ஜவுளி ரகங்களை அதிகளவில் வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை நெருங்குவதால் வியாபாரிகள் போட்டி போட்டு துணிகளை வாங்கிச்சென்றனர். கேரள வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளிச்சந்தை களை கட்டியது.

 

Advertisement