தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு சாப்ட்வேர் இன்ஜினியர் சேலம் லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, நவ.19: ஈரோடு சாப்ட்வேர் இன்ஜினியர், சேலம் லாட்ஜ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் சில்வர் ஓக் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (51). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவராவார். தற்போது பெங்களூரிலேயே வசித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கர் அவரது மனைவியிடம் நண்பர்களுடன் ஏற்காடு சென்று வருகிறேன் என கூறியுள்ளார். வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுள்ளார். சேலத்தில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அன்று இரவு 9 மணியளவில் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டும், போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், லாட்ஜ் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார். லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு வந்து பார்த்தனர்.

அங்கு கழிவறையில் அவர் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தூக்கில் தொங்குவதற்காக டவுன் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வெள்ளை நிற காடா துணி வாங்கி வந்து தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement