தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாய்க்காலில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் பறிமுதல்

கோபி, செப். 18: கோபி அருகே உள்ள குருமந்தூரில் கீழ்பவானி வாய்க்காலில் குப்பை கொட்டிய ஊராட்சி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கோபி அருகே உள்ள குருமந்தூரில் கீழ்பவானி பிரதான வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஊராட்சி கழிவுகள் கொட்டப்படுவதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்நிலையில், நேற்று வாய்க்காலில் கழிவுகளை கொட்டிய குருமந்தூர் ஊராட்சி மன்ற வாகனத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

நீர்வளத்துறை சார்பில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியும் தொடர்ந்து வாய்க்கால் மற்றும் வாய்க்கால் கரையிலும் குப்பைகளை கொட்டியதால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, நீர்வளத்துறை சார்பில் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கால்வாயில் குப்பை கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

 

Advertisement