தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் மிதமான மழை

ஈரோடு, செப். 17: வழி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  ஈரோடு நகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

மாலை 4 மணி அளவில் திடீரென வானம் இருண்டு, மேகங்கள் சூழந்து காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக லேசாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும், ஒரு சில இடங்களில் லேசான மழையாகவும் பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. குறிப்பாக ஈரோடு, பெருந்துறை ரோடு, திண்டல் உள்பட நகரப் பகுதிகளில் சற்று மிதமான மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. பொதுமக்களின் மாலை நேர இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் இரவு முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.  நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி, மாவட்டத்தில் நம்பியூரில் மட்டும் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

 

Advertisement

Related News