தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு,ஆக.15: அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி கீழ் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கவுரி சங்கர் (25). இவர், அந்தியூரை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த, 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி 8-7-2021 அன்று கடத்தி சென்று திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பாகவே பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார்,கடத்தல்,குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கவுரி சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த கவுரி சங்கர், நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்தார். நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவ்வழக்கு நேற்று ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சொர்ண குமார் விசாரித்து கவுரி சங்கருக்கு 20 ஆண்டு தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

 

Related News