தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப் பொருள் விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம்

ஈரோடு, ஆக. 11: ஈரோடு மாவட்டத்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே எடுத்துக் கூறி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தினர். மேலும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும் இது குறித்து விளக்கப்பட்டது.

Advertisement

பேனர்கள், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. போதை இல்லா தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் இதுவரை போலீசார் 690 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 294.915 கிலோ கஞ்சா மற்றும் 1,427 போதை மாத்திரைகள் 4,246.260 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 424 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தவிர முக்கிய குற்றவாளிகள் பிரிவு 14 கீழ் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 9442900373 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் போதைப்பொருகள் விற்பனை குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News