தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் 180 போலீஸ் ஈரோட்டில் இருந்து அனுப்பி வைப்பு

ஈரோடு, செப். 10: ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்புக்கு ஈரோட்டில் இருந்து 180 போலீசார் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் நாளை (11ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் என 180 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், 2 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 12ம் தேதி இரவு ஈரோடு திரும்புவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement