தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன் ஒலித்த 6 பஸ்களுக்கு அபராதம்

ஈரோடு, நவ. 7: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக ஏர்ஹாரனை ஒலிக்க செய்த 6 தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தினசரி 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தனியார் பஸ்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை ஒலிக்க செய்கின்றனர்.குறிப்பாக, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன்களை ஒலிக்க செய்கின்றனர்.

Advertisement

பொதுமக்கள் காதுகளை செவிடாக்கும் விதமாகவும், அதிக ஒலி எழுப்பும் வகையிலும், விபத்துக்கு காரணமாக உள்ள ஏர் ஹாரன்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ. சண்முகமூர்த்தி உள்ளிட்ட போலீசார் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, 6 தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்களை அகற்றினர். அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இச்சோதனை இன்றும் தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News