தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீன் வளம் பாதுகாக்க 4 லட்சம் மீன் குஞ்சுகள்

பவானி, நவ. 1: நாட்டின் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பவானி, காவிரி ஆறுகளில் தலா 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. பவானி ஆற்றில் ஆப்பக்கூடல்- கவுந்தப்பாடி பாலம் பகுதியில் 2 லட்சம் மீன் குஞ்சுகள், காவிரி ஆற்றில் கூடுதுறை படித்துறையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. ஈரோடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி, பவானிசாகர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன் தலைமை தாங்கினர்.

Advertisement

பவானி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, கிராம நிர்வாக அலுவலர் கவியரசு முன்னிலை வகித்தனர். நாட்டு இனங்களான சேல் கெண்டை, ரோகு இன மீன் குஞ்சுகள் ஆறுகளில் விடப்பட்டன. இதன் மூலம் நாட்டு இன மீன்களை பாதுகாத்து, உற்பத்தியை அதிகரித்தல், குறைந்த விலையில் புரதச்சத்து மிகுந்த மீன் உணவு கிடைத்தல், உள்நாட்டு மீனவர்களின் வருவாயை உயர்த்துதல், பல்லுயிர் உற்பத்தியை பாதுகாத்தல், மீன்களின் வாழ்விட சிதைவை தடுத்தல், சுற்றுச்சூழல் அமைப்பை காத்தல் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கிறது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ராஜசேகர், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement