தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆன்மிக பயணம் நிறைவு

கோபி, ஜூலை 26: ஈரோடு மாவட்டத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பயணத்தை நிறைவு செய்தனர்.ஆடி வெள்ளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பெற்ற 5 அம்மன் கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில், பவானியில் செல்லியாண்டியம்மன் கோயில், அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோயில், சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் மற்றும் கோபியில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு முன்பதிவு செய்த 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேர் அழைத்து செல்லப்பட்டனர். ஆன்மீக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கோயில்களில் வரிசையில் நிற்காமல் உடனடியாக சாமி தரிசனம் செய்தனர்.இறுதியாக, கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தவர்களை கோயில் செயல் அலுவலர் அனிதா தலைமையில் கோயில் அலுவலர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கோயில் பிரசாதம், தேநீர், பிஸ்கெட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை விட அரசு சார்பில் சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.