வலிப்பால் பள்ளி மாணவி உயிரிழப்பு
அந்தியூர், ஜூலை 25: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிகே புதூர் புரவிபாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சுகன்யா (15). இவர், குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த. இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, பள்ளியில் உடன்படிக்கும் மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதனையடுத்து இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழித்திருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.