சென்னை அருகே சரக்கு ரயில் விபத்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் ரத்து
ஈரோடு, ஜூலை 14: சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் பகுதியில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 6 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி, சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்-12675), கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12676), சென்னை-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12243), கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12244), சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-20643), சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12679) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, கோவையில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்ட கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண்-20644), கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12680) ஆகிய ரயில்கள் சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றின் சென்னை வரையிலான பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஈரோடு நிலையத்தில், பிளாட்பார்முக்கு செல்லும் நுழைவு பகுதியில் தற்காலிக பயணிகள் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும் 2 நாள்களுக்கு இந்த உதவி மையம் செயல்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.