தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பவானி ஆற்றில் வெள்ள அபாயம்; கொடிவேரி அணை மூடப்பட்டது

கோபி, ஆக. 4: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும். இங்கு ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

இதனால் கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையின் நீர்மட்டம் 102 அடி வரை தேக்க முடியும் என்பதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் கொடிவேரி அணையில் குறைந்த அளவே தண்ணீர் சென்றது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி அணை திறக்கப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை காரணமாக அணை நீர்மட்டம் 102 அடி உயரத்தை எட்ட தொடங்கியது.

இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், நேற்று கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கமாக ஆடிப்பெருக்கு பண்டிகையின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.

ஆனால், அணை மூடப்பட்டு அணையின் முன்புறத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையின் அழகை ரசித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.