தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி 16-வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்ட கட்டுமான பணிகள்

 

Advertisement

ஈரோடு, மார்ச் 14: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுமான பணியினை மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 1ம் மண்டலம் 16-வது வார்டு சிந்தன் நகரில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு சிந்தன் நகரில் நேற்று ரேஷன் கடை அமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு 1ம் மண்டல தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தலைமை வகித்து, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலையில் ரேஷன் கடை அமைக்கும் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 16வது வார்டு கவுன்சிலர் ஈபி ரவி செய்திருந்தார். உடன் மாநகராட்சி அதிகாரிகள், கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.10 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி 16வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமரா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதன் துவக்க விழா 16வது வார்டுக்கு உட்பட்ட வைராபாளையத்தில் நேற்று நடந்தது. இதில், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தலைமை வகித்து, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலையில் துவக்கி வைத்தார். இதையடுத்து 16வது வார்டில் 15 இடங்களில் 42 சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 16வது வார்டு கவுன்சிலர் ஈபி ரவி செய்திருந்தார். இதில், மண்டல தலைவர் பழனிசாமி, திமுக பகுதி செயலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News