தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு

 

ஈரோடு,ஜூலை25: ஆடி மாதம் அம்மன் கோயில்களில் வழிபாடு என்பது சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் ஆடி அமாவாசை நாளும் பக்தர்களின் வழிபாட்டுக்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷங்களை போக்குவதற்கும், அவர்களது ஆசியை பெறுவதற்கும் உகந்த நாள் என்பது நம்பிக்கை.

அதன் அடிப்படையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை, ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து,படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல மாவட்டத்தின் முக்கிய பரிகார இடங்களான பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையிலும் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோல குலதெய்வ கோயில்கள் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.