தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

 

Advertisement

ஈரோடு, அக். 28: பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக, மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வலி, சோர்வு, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் குவிந்த பொதுமக்கள், மருத்துவர்களிடம் தங்களை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.

இதேபோன்று, பெருந்துறை, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்து உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

Advertisement