தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரம்மாண்ட முகப்புடன் மேடை அமைப்பு

ஈரோடு, நவ. 26: ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவையொட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரம்மாண்ட முகப்புடன் மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, மேடை மற்றும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய வகையிலான பந்தல் அமைக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளது. இதில், மின் விளக்குகள், பேன்கள், ஒலி, ஒளி ஏற்பாடு போன்றவை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளான பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

8 மாவட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு

முதல்வர் வருகையை முன்னிட்டு ஈரோடு மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த எஸ்பி.கள் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதில், முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்கள், முதல்வர் வந்து செல்லும் வழித்தடங்கள், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடங்கள், திமுக நிகழ்ச்சி, திருமண விழா நடக்கும் மண்டபம் என அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுதவிர அரசு விழா நடக்கும் சோலார் புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் தமிழக காவல் துறை தலைமை அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன் ஆகியோர் தலைமையில் 8 மாவட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 450 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விழா, நடக்கும் மேடை, பந்தல் ஆகிய இடங்களில் மோப்ப நாய் மூலமும் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மூலமும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் தீ போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Advertisement

Related News