தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் 26ம் தேதி தேர்த்திருவிழா

 

Advertisement

ஈரோடு, செப்.23: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டு புரட்டாசி தேர் திருவிழா, வரும் 26ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது.

ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான தேர்த்திருவிழா வரும் 26ம் தேதி, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 27ம் தேதி இரவு அன்னபட்சி வாகனம், 28ம் தேதி சிம்ம வாகனம், 29ம் தேதி அனுமந்த வாகனம், 30ம் தேதி கருட சேவை, அக்.,1ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி காலை, 9.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

அப்போது, கோயிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், காந்திஜிவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை சேர்கிறது. 4ம் தேதி குதிரை வாகனம், 5ம் தேதி சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதலுடன் நிறைவு பெறுகிறது.

Advertisement