தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

 

Advertisement

மொடக்குறிச்சி, ஆக.18: சின்னியம்பாளையம் லட்சுமி நகரில் வெங்கடாசலம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (46). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி மகேஸ்வரி (44). இவர் புஞ்சை காளமங்கலம் கூட்டுறவு சொசைட்டியில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் கடந்த வியாழனன்று குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News