தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடுமணல் அகழாய்வு பகுதியில் கலெக்டர் ஆய்வு

 

Advertisement

ஈரோடு, ஆக.18: கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கைகள், நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கி.மு 4லிருந்து 5ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. கொடுமணலில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் இடத்தின் எச்சங்களும், இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தும் ஈமக்காட்டு பகுதியின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அதிகளவில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. பானையோட்டு கீறல்களிலிருந்து தமிழ் பிராமி எழுத்து வளர்ச்சிக்கான ஆதாரங்கள் உள்ளன. கொடுமணல் அகழாய்வு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையில் 7 இரும்பு உருக்கு உலை கலன்களும், அதிகளவில் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டு இரும்பு தயாரிப்பின் முக்கிய இடமாக திகழ்ந்துள்ளது.

குவார்ட்ஸ் என்று அறியப்படும் படிக கல்லினால் ஆன மணிகள், அப்பகுதியில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. செம்பழுப்பு நிறப்பூச்சு கொண்ட மட்கலன்கள், தமிழ் பிராமி பொறிப்பு பெற்ற மட்பாண்டச் சிதறல்கள், சங்கினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கலைப்பொருட்கள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள், முதுமக்கள் தாழிகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் இங்கு கண்டறியப்பட்டு முக்கிய அகழாய்வு தளமாக அறியப்படுகிறது.

Advertisement

Related News