தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் 32 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு

ஈரோடு, அக். 12: ஈரோடு மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வினை 32 மையங்களில் 9,963 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில், ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விவிசிஆர் செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மாவட்டத்தில் மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 10,356 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

Advertisement

இதில், 393 பேர் ஆப்சென்ட் ஆகி, 9,963 மாணவ-மாணவிகள் தேர்வினை எழுதினர். தேர்வானது, ஒ.எம்.ஆர். விடைத்தாள் முறையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement