தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோட்டை பெருமாளுக்கு பக்தர்கள் சீர் வரிசை

ஈரோடு, அக். 12: ஈரோட்டில் கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு பக்தர்கள் சீர் வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படும். இதில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத 4வது சனிக்கிழமை அன்று பெருமாளின் சகோதரியான பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து பெருமாளுக்கு பக்தர்கள் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்து படைத்து வழிபடுவது வழக்கம்.

Advertisement

இதேபோல், 17ம் ஆண்டு சீர் விழாவாக நேற்று இரவு பக்தர்கள் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து இனிப்பு, பழங்கள், ஆபரணங்கள், உடை, பூ உள்ளிட்டவைகளை 200க்கும் மேற்பட்ட தட்டுகளில் வைத்து சீர்வரிசையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, கஸ்தூரி அரங்கநாதர் கோயிலுக்கு வந்து மூலவருக்கு படைத்து வழிபட்டனர். இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement