தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மானியத்தில் வேளாண் கருவிகள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

 

ஈரோடு, ஆக. 5: வேளாண் கருவிகளை 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமானத் தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், ஈரோடு மாவட்டத்தில் 200 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. குறைந்தது 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் மின்சார வசதியுடன், தீவனம் பயிரிட்டுள்ள, இரண்டு பசு அல்லது எருமைகளுக்கு உரிமையாளராக இருக்கும் சிறுகுறு விவசாயிகள் இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பெண் விவசாயிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இதர தகுதிகள் இருப்பின் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அரசின் இதுபோன்ற திட்டத்தில் பயனடைந்தவர்களாக இருத்தல் கூடாது. புல் நறுக்கும் கருவியின் விலையில் 50 சதவீத தொகையினை தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விருப்பமுள்ளவர்கள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயி சான்றிதழுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.