தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓணம் பண்டிகை எதிரொலி: ஜவுளிச்சந்தையில் விற்பனை அதிகரிப்பு

ஈரோசு, செப்.3: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டிவிஎஸ் வீதி,ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜர் வீதி,பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி,செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச்சந்தை நடைபெற்று வருகிறது. தவிர ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு வெளி மாவட்டம்,வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து,ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடந்தது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.அதேபோல அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களின் வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.நாளைமறுநாள் (5ம் தேதி) கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதை முன்னிட்டு ஜவுளி கொள்முதல் செய்ய கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஓணம் கொண்டாட்டத்துக்கென பிரதேயகமாக வடிவமைக்கப்பட்ட வேட்டி, சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக செட் சேலைகள் எனப்படும் சேலைகளை 10 எண்ணிக்கை கொண்டவை ரூ.3,800 வரை விற்பனையானது. ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Related News