தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

ஈரோடு,செப்.2: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Advertisement

இதில் பவானி தாலுகா, புன்னம் கிராமம், பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் ஊரில் புன்னத்திலிருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பழைய சரவணா தியேட்டர் எதிர்ப்புறம் மேற்கு திசையில்,செட்டிகுட்டை வரை சுமார் ஒன்றரை கி.மீ நீளமும், பத்தடி அகலமும் கொண்ட பாதையை கடந்த பல தலைமுறைகளாக விவசாயம் செய்வதற்காகவும் அங்குள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று வரவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தப் பாதையை இதற்கு முன்பாக அரசு ரீ-சர்வே செய்தபோது, அரசு பொது பாதை என அறிவிக்காமல் விட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து அதை பொது பாதையாக அறிவிக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த பாதையை அரசு பொது பாதையாக அறிவிக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சி அசகித்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்து கானக்குந்தூர்,ஒசப்பாளையம் தார்சாலை வரை 16 அடி அகலத்துக்கு நடைபாதை விடப்பட்டிருந்தது. இதன் மூலமாகவே எங்கள் பகுதிக்கு நாங்கள் சென்று வந்தோம். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.அதனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் மனு அளித்திருந்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News