தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

அண்ணாநகர்: திருமங்கலத்தில் பாதுகாப்பு உபகரணங்களின்றி மழைநீர் கால்வாய்க்குள் இறங்கி, தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைநீர் கால்வாய் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
Advertisement

அதன்படி, சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் உள்ள மழைநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் முககவசம், கையுறை, ஒளிரும் தன்மை கொண்ட ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் கால்வாய்க்குள் இறங்கி, வெறும் கைகளால் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதுடன், விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளது.

கால்வாய்களில் மனிதர்களை ஈடுபடுத்தி தூய்மை பணி மேற்ெகாள்ள கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை மீறி தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் கால்வாயை சுத்தம் செய்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News