தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், ஜூன் 6: உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி நேற்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணியில் கூத்தாநல்லூர் பெண்கள் கல்லூரி, நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி, திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய ரயில் நிலையத்திலிருந்து துவக்கி இப்பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று புலிவலம் வாளவாய்க்கால் பகுதியில் முடிவுற்றது.முன்னதாக உலக சுற்றுச்சுழல் தின உறுதிமொழியை கலெக்டர் சாரு தலைமையில் பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரெங்கராஜ், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி மேலாளர் மோகன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், வாசுதேவன், சண்முகசுந்தரம், நடனம், பசுமை தோழர் பேகன் ஜமீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement