தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் மின்வாரிய அலுவலகம் முன் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

அரியலூர், மார்ச் 19: அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து நிலை பொ றியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் தெற்குப் பிரிவில் கடந்த 6ம் தேதி மின்கம்பத்தில் ஏரிய கேங்மேன் ராஜராம், கவனக்குறைவுக் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்ததையடுத்து, மேற்பார்வையாளர் ரவிசந்திரன், கேங்மேன் பெரியசாமி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த பிரச்னையை திசை திருப்பி, அலுவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்ஸ்டீன் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து நிலை பொறியாளர்களும் அச்சமின்றி பணிப்புரிய உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, பெரம்பலூர் மின் பகிர்மான பொறியாளர் கழகச் செயலர் பொன்சங்கர் தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் மற்றும் அரியலூர், கோட்ட தொமுச திட்டத் தலைவர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Advertisement