தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல், ஜூன் 2: மாஞ்சா நூல் கழுத்தறுத்து சாப்ட்வேர் இன்ஜினியர் படுகாயமடைந்தார். அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் காந்தி நகர் காவேரி சாலையை சேர்ந்தவர் திலீப் குமார் (32). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் - புழல் பைபாஸ் சாலை மேம்பாலத்திலிருந்து சைக்கிள் ஷாப் பகுதியில் கீழே இறங்கியபோது, காற்றாடி மாஞ்சா நூல் பறந்து வந்து இவர் மீது விழுந்ததில், கழுத்து மற்றும் கைகள் அறுபட்டு, படுகாயமடைந்தார்.

Advertisement

ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த இவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிந்து, தடையை மீறி மாஞ்சா நூல் காற்றாடி விட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர். கடைகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால், அதை மீறி பலர் ஆன்லைனில் காற்றாடி, மாஞ்சா நூல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News