தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெடியங்காடு புதூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை, நவ. 5: ஆர்.கே.பேட்டை அருகே வெடியங்காடு, புதூர் கிராமத்தில் இருபுறமும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மலைப்பகுதி உள்ளது. இங்கு, மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் செல்வதற்காக 6 அடி கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த, கால்வாய் செல்லும் பகுதியில் இருபுறமும் விவசாயிகள், தங்களது விவசாய நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது 2 அடி கால்வாயாக சுருங்கியுள்ளது. இதனால், மழைக்காலங்களில் மலையில் இருந்து வரும் மழைநீரானது கால்வாயில் செல்ல முடியாமல் வீணாக விளைநிலங்களில் புகுந்து விடுகிறது.

மேலும், 2 அடி கால்வாயிலும் செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மலையிலிருந்து வரும் மழைநீர் கால்வாயில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மழைநீர் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றியும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மலையிலிருந்து வெளியேறும் மழைநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News