தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5 லட்சம் கடனை தராததால் கார் ஏற்றி எலக்ட்ரீசியன் படுகொலை: உறவினர் தப்பி ஓட்டம்

போரூர், ஏப்.17: வீடு கட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்த எலக்ட்ரீசியன் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி ஓடிய உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுராந்தகம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அடுத்த மங்கலம் கிராமத்ைதச் சேர்ந்தவர் சரத்பாபு (45), எலக்ட்ரீசியன். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (30), ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சரத்பாபு 2021ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனது உறவினரான சிவராஜிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை சரத்பாபுவிடம் சிவராஜ் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், சரத்பாபு பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், சிவராஜ் தனது காரில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சரத்பாபு தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை சிவராஜ் பார்த்து, பணம் வாங்கிவிட்டு காலம் தாழ்த்தியும்கூட இன்னும் கொடுக்காததால் அவர் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். தனது கடனை தராமல் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ஆதங்கத்தில், காரை படுவேகமாக ஓட்டிச் சென்று சரத்பாபு மீது பயங்கரமாக மோதிவிட்டு அங்கிருந்து சிவராஜ் சென்றுவிட்டார்.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரத்பாபு ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அங்கிருந்த நண்பர்கள் உடனே மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரத்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காரை ஏற்றி சரத்பாபுவை கொலை செய்த சிவராஜ் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Related News