தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் மின்சார ரயில் தடம் புரண்டது: அரக்கோணம் அருகே பரபரப்பு

 

Advertisement

சென்னை, ஜூன் 28: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பயணிகள் ரயில் தடம் புரண்டது.  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து நேற்று இரவு சுமார் 9.10 மணி அளவில் பயணிகள் மின்சார ரயில் காட்பாடிக்கு புறப்பட்டு சென்றது. சித்தேரி ரயில் நிலையத்தில் நின்று, மீண்டும் இரவு 9:30 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் வந்த நிலையில், ரயில் தடம் புரண்டது.

உடனே சாதுர்யமாக செயல்பட்டு டிரைவர் ரயிலை நிறுத்தினார். பின்னர் கீழிறங்கி பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு இடங்களில் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், அரக்கோணம் - காட்பாடி மார்க்கத்தில் ரயில் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

Advertisement