தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்

 

Advertisement

கோவை, ஏப்.15: கோவையில் பாராளுமன்ற தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. போலீசார் தபால் ஓட்டு இன்றும், நாளையும் போட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என 2,198 பேருக்கும், ஊர்க்காவல் படையினர் 350 பேருக்கும், முன்னாள் போலீசார் 52 பேருக்கும் என மொத்தம் 2,600 பேருக்கு தபால் ஓட்டு செலுத்துவது தொடர்பான முதல்கட்ட படிவம் வழங்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் நேரில் வந்து தபால் ஓட்டு செலுத்தி விட்டு செல்கின்றனர்.

இவர்களில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தபால் ஓட்டுப்போட்டார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஓட்டுப்போட்ட போலீசாருக்கு விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. அழியாத மையுடன் போலீசார் சிலர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஓட்டு போட்டாச்சு, எங்க ஜனநாயக கடமையை செய்து விட்டோம் என தகவல் வெளியிட்டனர்.

 

Advertisement