தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகைகள் கொள்ளை

காரைக்கால், ஜூலை 24: காரைக்காலில் மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை ெகாள்ைளயடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமலிங்கம் (82). இவரது மனைவி கணகவள்ளி (76). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ராமலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில் கதவை திறந்த அவரது மனைவி கனகவள்ளியை சப்பாத்தி கட்டை கொண்டு 3பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர். கனகவள்ளி மயங்கிய நிலையில் வீட்டிலிருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Advertisement

பின்னர், வீட்டிற்கு திரும்பிய ராமலிங்கம் வீட்டின் கதவு திறந்த நிலையில் மனைவி கனகவள்ளி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவு திறந்து கிடந்த நிலையில் அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்த கனகவள்ளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, திருநள்ளாறு போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement