தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுட்டெரித்த வெயில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவதி

கோடை காலம் தொடங்கிய நாளிலிருந்து காரைக்கால் மாவட்டத்தில் சராசரி விகிதத்தை விட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.தற்பொழுதே 36 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றன.வெயிலுடன் இறுக்கமான சூழலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது.

Advertisement

இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வெப்பநிலையாக மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவானது.மேலும் கடற்கரை ஓரங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் சுமார் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பொதுமக்களால் உணரப்படுகிறது.நேற்று அதிக அளவில் வெப்ப அலை வீசியதால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலோடும் மற்றும் நீரிழப்பால் கடும் சிரமங்களுக்கிடையே பயணம் செய்தனர்.

பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மதியம் 11 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை மேலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் உயரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.வெயில் தாக்கத்தை சமாளிக்க சாலையோர நுங்கு,இளநீர்,மோர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட இயற்கை பானங்களை நாடி பொதுமக்கள் செல்கின்றனர்.அதீத வெப்பத்தால் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு நீரிழப்பு நோய்கள் மற்றும் பக்கவாதம் சார்ந்த நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Related News