தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி முதியவர் பலி

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 9: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில் சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் தேவாலய கூடலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவர் தனது தம்பியுடன் அவரது குலதெய்வமான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாரியம்மன் கோவிலுக்கு அரசு பஸ்ஸில் செல்லும் போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில் TNPL நிறுவனம் அருகில் உள்ள பேக்கரி கடையில் இரவு ஒரு மணி அளவில் பேருந்து டீ குடிப்பதற்காக நிறுத்தி உள்ளனர்.

அப்போது தங்கராஜ் இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அவர் வருவதற்குள் பேருந்து கிளம்பியுள்ளது. அதனை கண்டு தங்கராஜ் திடீரென சாலையை மீண்டும் கடந்து வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது . இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News