தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து தகராறில் முதியவர் மீது சரமாரி தாக்குதல்

 

Advertisement

கோவை, பிப். 15: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (73). சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சிவானந்தபுரத்தில் நிறைய வீடுகள் உள்ளது. அதில் சில வீட்டை மனைவி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மீதமுள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அந்த வீடுகளை தங்களது பெயருக்கு எழுதி வைக்குமாறு நடராஜனின் மகன்கள் ராஜபிரபு, செந்தில்பிரபு ஆகியோர் கேட்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு ராஜபிரபு, செந்தில்பிரபு, பேரன் பிரகதீஸ்வரன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜபிரபு இரும்பு ராடால் நடராஜனை தாக்கினார்.

மற்ற இருவரும் சேர்ந்தும் நடராஜனை சரமாரியாக தாக்கினர். இதில் நடராஜனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் ராஜபிரபு, செந்தில்பிரபு மற்றும் பேரன் பிரகதீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News