தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு லேப்டாப், பாராட்டு சான்றிதழ்: கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்

செய்யாறு, ஆக. 6: முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு லேப்டாப், பாராட்டு சான்றிதழை கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணவி டி.பிரிதர்ஷிணி ஜெஇஇ தேர்வில் வெற்றி பெற்று வாரங்கல், என்ஐஐடி யில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து, அம்மாணவியை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டி மடிக்கணினி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

Advertisement

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனத்தில் சேர உள்ள அம்மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ரவிக்குமார் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை மற்றும் உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்களான விஸ்வநாதன், பேபி ராணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தேவி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவியர் சங்க தலைவி மெய்.பூங்கோதை மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement