தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூவாளூர் பேரூராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஏரி கரையில் கொட்டி எரிப்பு

 

Advertisement

லால்குடி, மே 29:திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர்பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தினந்தோறும் அரை டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு லால்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்பொழுது லால்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் இயந்திரம் கொண்டு குப்பைகளை பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பூவாளூர் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாததால் மாதானம் ஏரி கரையில் மயானத்திற்கு இடையே செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு அங்கேயே தீவைத்து எரிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பூவாளூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலை வழியாக செல்லும் பேருந்துகளில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

துர்நாற்றத்துடன் புகை கிளம்புவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. மேலும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், குப்பைகளை பேரூராட்சி நகராட்சி நிர்வாகம் கொளுத்த கூடாது என உத்தரவு விட்டுள்ளது. இதனை மீறி பூவாளூர் பேரூராட்சியில் குப்பைகளை மாதானம் ஏரி கரையில் கொட்டி கொளுத்துவதால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பூவாளூர் பேரூராட்சியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க தனியாக கிடக்கு அமைக்க வேண்டும் என்பது பூவாளூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

Advertisement

Related News