தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் நடந்த அதிரடி வேட்டையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக பெருநகர காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் சென்னை முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, 1,184 போதை மாத்திரைகள், 8 கத்திகள், 7 சல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement

குறிப்பாக தண்டையார்பேட்டை காவல் எல்லையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கார்கில் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக் (25), வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம் (25), செங்குன்றம் கோமதி அம்மன் நகரை சேர்ந்த ஜோசப் (எ) தினேஷ் (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தி.நகர் நடேசன் பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த செங்குன்றம் ஆதாம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News