தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

பட்டுக்கோட்டை, மார்ச் 19: பட்டுக்கோட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை முன்னிறுத்தி போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோட்ட கலால்துறை சார்பில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை நாடிமுத்துநகர் காந்தி பூங்காவிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் தெய்வானை தொடங்கி வைத்தார்.

பேரணி காந்தி பூங்காவிலிருந்து புறப்பட்டு நாடிமுத்துநகர், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதியில் வழியாக சுற்றிவந்து மீண்டும் காந்தி பூங்காவில் முடிவடைந்தது. பேரணியில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், மனோதண்டபாணி மற்றும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கூட்டுறவு ஐ.டி.ஐ மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் விதமாக விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.

Advertisement