தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பட்டுக்கோட்டை, ஜூன் 20: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் மதுவிலக்கு டி.எஸ்.பி. தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சார்பில் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகதாஸ் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலால் தாசில்தார் சுமதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Advertisement

மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகதாஸ் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தில், தங்களது பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்தாலோ அல்லது போலி மதிபானங்கள் தயாரித்தாலோ, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் அல்லது தயாரித்தாலோ, இதர மதுபானங்கள் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம். அலைபேசி எண் 9498171100. தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581.

Advertisement