தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை

விருதுநகர், ஜூன் 18: விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் புதிய வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் ரோடுகளுக்கு வரும் முன் ரோடு வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை செலுத்திய பின்னர் பதிவு எண் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் வருடம்தோறும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும். ஆனால் பல வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என அரசுகள் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம். இன்சூரன்ஸ் செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement

வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் வாகனங்களை இயக்கும் போது, கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கு உரிய இன்சூரன்ஸ், புகை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் போலீசார் மூலம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் வாகனங்களை இயக்குவது மிகப்பெரிய குற்றமாகும். அவ்வாறு இயக்கும் நபர்களின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் உள்ளது. எனவே, லைசென்ஸ் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

Advertisement