தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திம்பம் மலைப்பாதையில் பனிமூட்டத்தால் வாகனஓட்டிகள் அவதி

 

Advertisement

சத்தியமங்கலம்,நவ.5: திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1146 மீட்டர் உயரத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  நேற்று காலை திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததோடு கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை மித வேகத்தில் இயக்கினர். மலைப்பாதை வழியாக பயணித்த சுற்றுலாப் பயணிகள் திம்பம் மலை உச்சியில் நின்று பனி மூட்டத்துடன் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.பனிமூட்டம் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News