தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாண்டிகோயில் பகுதியில் தொடரும் வாகன நெரிசல் டிரைவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

 

Advertisement

மதுரை, செப். 2: மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாண்டி கோவில் பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மேலமடை பகுதியில் அமைந்துள்ள பாண்டி கோயில், மதுரையின் முக்கிய கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. இக்கோயிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிடாய் வெட்டி விருந்து வைத்து நேர்த்தி கடன் செலுத்தவும் வருகை தருகிறார்கள். அதற்காக பாண்டிகோவில், சாலையில் பல்வேறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமையை என்பதால் காலை முதலே அதிகளவில் கனரக வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த பக்தர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தியால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். வாரம் தோறும் இது போன்று நடப்பதால் வரும் காலங்களில் விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நெரிசலை தவிர்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News