தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி 2 பேர் படுகாயம் செய்யாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற

செய்யாறு, ஜூன் 28: செய்யாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற லோடு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த எசையனூர் மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(35), லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பில்லாதாங்கல்- கீழ்நெல்லி சாலையில், பாலாற்று படுகையில் இருந்து அனுமதி இன்றி மணலை லோடு ஆட்டோவில் ஏற்றிக்சென்று கொண்டிருந்தார். அவருடன் மணலை தள்ளுவதற்காக வளவனூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் வினோத்குமார்(36), சாரதி(18) ஆகியோரும் சென்றனர்.

Advertisement

பில்லாந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் 3 முறை புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், அவருடன் சென்ற வினோத்குமார், சாரதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருளின் அண்ணன் பழனி என்பவர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Related News